என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகளுக்கு தடை"
- கோவையில் டாப்சிலிப் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
- விடு முறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப், கவியருவி, சின்னகல்லார், பரம்பிகுளம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன.
எனவே கோவை மட்டு மின்றி வெளிமாவட்ட ங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனை மலை புலிகள் காப்பக சுற்றுலா தலங்களில் ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்ப சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். விடு முறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் குறிப்பாக வால்பாறை செல்லும் சுற்றுலா பயணி கள் பலரும், போக்கு வரத்து சாலைக்கு வெகுஅருகில் உள்ள கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகின்ற னர்.
இங்கு மழை காலத்தி ன்போது, அருவியில் தண்ணீர் வரத்து அதிகளவில் இருக்கும். அப்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.
கவியருவியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. எனவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் அங்கு போதிய மழை இல்லை. வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
எனவே கவியருவியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இறுதிவரை நீர்வீழ்ச்சியின் ஓரத்தில் நூல் போல வந்து கொண்டு இருந்த தண்ணீர் வரத்து, கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் முற்றிலுமா க நின்றுபோ னது.
எனவே கவியருவிக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டது.
அங்கு வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கவியருவிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
- நீரோடைகள் மூலம் நீர் வரத்து உள்ளது.
- சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
பொள்ளாச்சி,
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வால்பாறை வனப்பகுதிகளில் இருந்து உருவாகும் நீரோடைகள் மூலம் நீர் வரத்து உள்ளது. இங்கு குளிக்க கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகளின் காரணமாக நீர்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீர் கொட்டியது. ஆனால் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர் வரத்து முற்றிலும் குறைந்து போனது.
இதனால் குறைந்த அளவே தண்ணீர் கொட்டுகிறது. இதன் காரணமாக தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மேலும் தண்ணீர் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்தது.
இதனால் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறையினர் நேற்று முதல் தடை விதித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, மழை பெய்து மீண்டும் நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நுழைவாயில் பூட்டப்பட்டு யாரும் அத்துமீறி உள்ளே செல்வதை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்